Tamilmusic(Thevaram)

Monday, May 15, 2006

THIRU PUGHALUR

திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(முதல் திருமுறை)
1.2 திருப்புகலூர்
பண் - நட்டபாடை
12
குறிகலந்தஇசை பாடலினான்நசை யாலிவ்வுல கெல்லாம்நெறிகலந்ததொரு நீர்மையனாயெரு தேறும்பலி பேணிமுறிகலந்ததொரு தோலரைமேலுடை யானிடம்மொய்ம் மலரின்பொறிகலந்தபொழில் சூழ்ந்தயலேபுய லாரும்புக லூரே.
1.2.1
13
காதிலங்குகுழை யன்னிழைசேர்திரு மார்பன்னொரு பாகம்மாதிலங்குதிரு மேனியினான்கரு மானின்னுரி யாடைமீதிலங்கவணிந் தானிமையோர்தொழ மேவும்மிடஞ் சோலைப்போதிலங்குநசை யால்வரிவண்டிசை பாடும்புக லூரே.
1.2.2
14
பண்ணிலாவுமறை பாடலினானிறை சேரும்வளை யங்கைப்பெண்ணிலாவவுடை யான்பெரியார்கழ லென்றுந்தொழு தேத்தஉண்ணிலாவியவர் சிந்தையுள்நீங்கா வொருவற்கிட மென்பர்மண்ணிலாவும்அடி யார்குடிமைத்தொழில் மல்கும்புக லூரே.
1.2.3
15
நீரின்மல்குசடை யன்விடையன்னடை யார்தம்அரண் மூன்றுஞ்சீரின்மல்குமலை யேசிலையாக முனிந்தன்றுல குய்யக்(*)காரின்மல்குகடல் நஞ்சமதுண்ட கடவுள்ளிட மென்பர்ஊரின்மல்கிவளர் செம்மையினாலுயர் வெய்தும்புக லூரே. (*) முனிந்தானுலகுய்ய என்றும் பாடம்.
1.2.4
16
செய்யமேனிவெளி யபொடிப்பூசுவர் சேரும்மடி யார்மேல்பையநின்றவினை பாற்றுவர்போற்றிசைத் தென்றும்பணி வாரைமெய்யநின்றபெரு மானுறையும்மிட மென்பரருள் பேணிப்பொய்யிலாதமனத் தார்பிரியாதுபொ ருந்தும்புக லூரே.
1.2.5
17
கழலினோசைசிலம் பின்னொலியோசை கலிக்கப்பயில் கானிற்குழலினோசைகுறட் பாரிடம்போற்றக் குனித்தாரிட மென்பர்விழவினோசையடி யார்மிடைவுற்று விரும்பிப்பொலிந் தெங்கும்முழவினோசைமுந் நீரயர்வெய்த முழங்கும்புக லூரே.
1.2.6
18
வெள்ளமார்ந்துமிளிர் செஞ்சடைதன்மேல் விளங்கும்மதி சூடிஉள்ளமார்ந்தஅடி யார்தொழுதேத்த உகக்கும்அருள் தந்தெங்கள்ளமார்ந்துகழி யப்பழிதீர்த்த கடவுட்கிட மென்பர்புள்ளையார்ந்தவய லின்விளைவால்வளம் மல்கும்புக லூரே.
1.2.7
19
தென்னிலங்கையரை யன்வரைபற்றி யெடுத்தான்முடி திண்டோ ள்தன்னிலங்குவிர லால்நெரிவித்திசை கேட்டன்றருள் செய்தமின்னிலங்குசடை யான்மடமாதொடு மேவும்மிட மென்பர்பொன்னிலங்குமணி மாளிகைமேல்மதி தோயும்புக லூரே.
1.2.8
20
நாகம்வைத்தமுடி யானடிகைதொழு தேத்தும்மடி யார்கள்ஆகம்வைத்தபெரு மான்பிரமன்னொடு மாலுந்தொழு தேத்தஏகம்வைத்தஎரி யாய்மிகவோங்கிய எம்மானிடம் போலும்போகம்வைத்தபொழி லின்நிழலான்மது வாரும்புக லூரே.
1.2.9
21
செய்தவத்தர்மிகு தேரர்கள்சாக்கியர் செப்பிற்பொரு ளல்லாக்கைதவத்தர்மொழி யைத்தவிர்வார்கள் கடவுள்ளிடம் போலுங்கொய்துபத்தர்மல ரும்புனலுங்கொடு தூவித்துதி செய்துமெய்தவத்தின்முயல் வாருயர்வானக மெய்தும்புக லூரே.
1.2.10
22
புற்றில்வாழும்அர வம்மரையார்த்தவன் மேவும்புக லூரைக்கற்றுநல்லவவர் காழியுள்ஞானசம் பந்தன்தமிழ் மாலைபற்றியென்றுமிசை பாடியமாந்தர் பரமன்னடி சேர்ந்துகுற்றமின்றிக்குறை பாடொழியாப்புக ழோங்கிப்பொலி வாரே.
1.2.11காவிரி தென்கரைத் தலம்.சுவாமிபெயர் - அக்கினீசுவரர்; தேவியார் - கருந்தார்க்குழலியம்மைதிருச்சிற்றம்பலம்

0 Comments:

Post a Comment

<< Home